ஞாயிறு, 27 நவம்பர், 2011

காதல் காலம்

வாழ்வை இணைத்து செல்லும் காதலை
இதயம் இனிக்க சொன்னாய்
நனைத்து செல்லும் மழையிலே
நனையாமல் இருந்தது உன் காதல்

காலில் ஒட்டி உறுத்தும் மணல் போல்
உன் சிறு பிரிவு என்னை வருத்தினாலும்
கொளுத்தும் வெயிலில் கிடைக்கும் சிறு நிழல் போல
அழுத்தமாய் அன்று நீ கொடுத்த முத்ததின் நினைவு
பதிகமாய் பதிந்து பரவசமுட்டுது.

முத்தம் காதலில் முத்திரை
முத்திரையற்ற பத்திரம்
செல்லாததுப் போல்
இதழ் முத்தியரையற்ற காதல்
முழுக் காதல் ஆகாது

சேர்ந்துவிடும் ஆசையுடன்
சேகரிக்கும் கனவுகள் எல்லாம்
காலத்தால் கலைந்து விடமால் காக்க 
காதலால் செய்த ஒரு காலப் பாத்திரம்
இதயம் என்ற இன்னொரு பெயராலும் அழைக்கபடும்

கருத்துகள் இல்லை: