”இறைவன் இருக்கிறான, இல்லையா
வாதப் பிரதிவாதிகளின்
வாதத்தால் வார்த்தை தடித்தது.
வாதப் பிரதிவாதிகளின்
வாதத்தால் வார்த்தை தடித்தது.
சூழ்நிலையின் நெருப்பு கண்டு
சுற்றத்தார் சூட்சகமாய் வாதத்தினை நிறுத்த
இறை இருப்பை நிலை நிறுத்த முடியா
இயலாமையுடன் விலகிப்போனான் வாதி
புறப்பட்டவன் தன் வருத்த குரலால்
ஆண்டவன் எனக்கு எழுதிய
இன்றைய நாளின் எழுத்து
கோணலாகிப் போனதின் கோலமே
இது எனக் கூறி சென்றான்
கூறியவன் குரல் கேட்ட பிரதிவாதி
இறை மறுப்பு வாதத்தை இடுக்கில் தள்ளிவிட்டு
இறை எழுத்தின் இருப்பை எள்ளி நகையாடினான்
தன் எழுத்தை நிருப்பிக்க இறைவன்
தனி ஒரு பிறவி எடுப்பானா என
தவிர்க்க முடியா ஒரு கேள்வியுடன்
தனித்து நின்றேன் நான்
எள்ளி நகையாடிய எக்காலக் குரலை
தம் இனிய குரலால் இடைமறித்து
இளம் மழலை கூட்டம் ஒன்று
ஆடிப் பாடி அங்கே வந்தது
கூடி நின்ற கூட்டத்தை தம் குளிர்
பார்வையால் கட்டி இழுத்து
தளிர் கரத்தால் அருகிருந்த சுவற்றில்
கிறுக்கல் எழுத்துகளை பதிக்க தொடங்கியது
மழலைகள் கிறுக்கலை கண்டு
நிலை மறந்து மலைத்து நின்றான்
இறை இருப்பை நிலை நிறுத்த முடியா
இயலாமையுடன் விலகிப்போனான் வாதி
புறப்பட்டவன் தன் வருத்த குரலால்
ஆண்டவன் எனக்கு எழுதிய
இன்றைய நாளின் எழுத்து
கோணலாகிப் போனதின் கோலமே
இது எனக் கூறி சென்றான்
கூறியவன் குரல் கேட்ட பிரதிவாதி
இறை மறுப்பு வாதத்தை இடுக்கில் தள்ளிவிட்டு
இறை எழுத்தின் இருப்பை எள்ளி நகையாடினான்
தன் எழுத்தை நிருப்பிக்க இறைவன்
தனி ஒரு பிறவி எடுப்பானா என
தவிர்க்க முடியா ஒரு கேள்வியுடன்
தனித்து நின்றேன் நான்
எள்ளி நகையாடிய எக்காலக் குரலை
தம் இனிய குரலால் இடைமறித்து
இளம் மழலை கூட்டம் ஒன்று
ஆடிப் பாடி அங்கே வந்தது
கூடி நின்ற கூட்டத்தை தம் குளிர்
பார்வையால் கட்டி இழுத்து
தளிர் கரத்தால் அருகிருந்த சுவற்றில்
கிறுக்கல் எழுத்துகளை பதிக்க தொடங்கியது
மழலைகள் கிறுக்கலை கண்டு
நிலை மறந்து மலைத்து நின்றான்
இறை எழுத்தின் இருப்பை கேட்டவன்
இனியேனும் அவனுக்கு புரிந்திருக்குமோ
தன் எழுத்தை நிருப்பிக்க
தனி ஒரு பிறவி தேவையில்லை
தளிர் நடை போடும் குளிர் நிலவுகள்
அனைத்திலும் தான் இருப்பேன் என
இறைவன் சொல்லாமல் சொல்லுவதை”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக