ஞாயிறு, 24 ஜூன், 2012



மீண்டும் ஒரு மனித தவறால் மரித்து போன 
மலர் மஹிக்கு, என் கண்ணீர் அஞ்சலி
*********************************************




மலரே மஹி
சில மனித மிருங்களின்
மதி கெட்ட மறதியால்
இந்த பூமியில் உதித்து
மலரும் முன் உதிர்ந்து போனாய்

படுங்குழியில் நீ பட்ட வேதனைகள்
ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாத வடுவாய்
உன்னை பெற்றவர்களுக்கு மட்டும்மல்ல
எங்களுக்கும் நிலைத்திருக்கும்

உடல் துறந்து உலகம் விட்டு சென்ற மெல்லிய பூவே,
மண்ணில் நீ புதைக்கப்பட்டாலும்,எங்கள் நெஞ்சில்,
உன் நிணைவுகளை விதைத்து விட்டு சென்றுவிட்டாய்

தீரா ரணத்துடன் உன் ஆன்மா சாந்தியடையவும்
உம் பெற்றோர், உற்றோர் ஆறுதல் அடையும்
விழி நிறைந்த கண்ணீருடன் வேண்டுகிறோம்

இறைவனின் இல்லத்தில்
இளைப்பாறிக் கொண்டு இருப்பாய்
என இதயம் நிறை நம்பிக்கையுடன்
விடைக்கொடுக்கிறோம்
சென்று வா சிறுமலரே

சனி, 23 ஜூன், 2012

நினைவு பயணம்.






நினைவுகளால் நெடுதூர பயணம்
காலம், நேரம் என கணக்கு பார்க்காமல்
காலதேவனின் தேரில் ஏறி செல்கிறேன்

இதோ முடிந்துவிடும் என நினைக்கும் நேரத்தில்
இன்னொமொரு நினைவு மைல்கல்லின்,
காத்திருப்பு நினைவு வர மீண்டும் தொடர்கிறது பயணம்

முடிவில்லா இந்த நினைவு பயணத்தில்
முதல் புள்ளியாய் உன் நினைவை சுமந்து சென்றவன்
முற்றுப்புள்ளியாய் இருக்கும் உன் வருகையை எண்ணி, எண்ணி வயதாகிப்போனேன்.

முற்றுப்புள்ளிக்காய் காத்திருந்தவன்
முதுமை நரை கொண்டு, முகம் சுருங்கி,
கால தேவனின் தேரில் இருந்து
காலனின் தேருக்கு மாறும் காலம் ஆகிவிட்டது

முடிவில்லா இந்த பயணத்தில்
என் மூச்சு அடங்கும் முன்
முழு நிலவே உன் முகம் காட்டிடு
நினைவு சிறகுகளல் வருடப்பட்டு
மீண்டும் புது மனிதானய் பிறந்திடுவேன்.

கனவு......................

நெடும் கனவில் உன் விரல் பிடித்து
கடற்கரை மணலில் கால் பதித்து நிற்கிறேன்

வீசும் காற்றுக்கு வீணை மீட்டி
என் மூச்சு காற்றும்,
உன் மூச்சு காற்றும் பேசிக்கொள்ள ,

இணைய முடியா இருப்பில்
நம் இரு உதடுகளும் துடிக்க
இவற்றின் நிலையால் என் உடலில்
ஏற்படும் சில ரசாயண மாற்றத்தை
நான் விழி மூடி ரசிக்கும்,
ஒரு இனிய தருணம்
இடைவெளியின்றி நடந்தது

பின், மெல்ல விழி திறந்து பார்க்கிறேன்
விழி மூடி இருந்த என்னை
விழி அசையாமல் ரசிக்கும்
உன்னை கண்டேன்

விழி மூடி ரசித்த என் அனுபவம் பெரியதா,
இல்லை, விழி அசையா என்னை ரசித்த,
உன் ரசனையின் அனுபவம் பெரியாதா,
என்ற கேள்வியுடன்
தொடர்கிறது மீண்டும் கனவு