ஞாயிறு, 27 நவம்பர், 2011

எப்ப வரப் போற மாமா

”ஆடி அசையும் தோரணமும்
கூடி கூலாவும் கோபுர புறாக்களும்
துள்ளட்டம் போட செய்யும்
இசையோடு மேள தாளமும்

ஆனந்தமாய் அலறும் குரலோடு
வட்டமாய் சுத்தும் குடை ராட்டினம்
கட்டி இழுக்கும் காந்த குரலால்
தட்டியழைக்கும் ஒலிபெருக்கி விளம்பரம்

பாசக்குரலில் பெயரை சொல்லி
உறவின் பெருமைகளை உரையாடி
பரிவன்பை பஞ்சமின்றி அள்ளி தரும்
பாசங்கில்லா அன்புக் கூட்டமும்

இத்தனையும் நிறைஞ்சியிருந்தும் திருவிழா
நிறைக்கவில்லை மாமா என் மனசை
பாலை மணலின் கொத்தி எடுக்கும் சூட்டோட
நம்ம குடுமபத்தை நிலை நிறுத்த

தனிமையே துணையாக, தவிப்பே உணர்வாக
நிலை கொண்ட உன் இருப்பு, நித்தமும்
என் நெஞ்சை சுத்தி சுத்தி வந்து நிற்க
நம்மை சுத்தியடிச்ச கால சூறாவெளியில்

நான் சுருண்டு போன காகிதமா
கத்தியழ சக்தியின்றி தவிச்சி இருக்கேன்
கண்ணீரோட கொட்டியழ கோடியுண்டு
ஒரு எட்டு  வெச்சி நீயும் வந்த

குளிர்ந்து போகும் எம் மனசு
குறை தீர்க்க வேணுமின்னு
குலச் சாமி கோவிலுக்கு
ஏத்தி வெச்சேன் மாவிளக்கு

எப்ப வர போற மாமா, நீ எப்ப வர போற”

கருத்துகள் இல்லை: