ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
சனி, 29 செப்டம்பர், 2012
ஆரம்ப பாடசாலை நினைவுகள் - 1
கடந்த சில தினமாக பேஸ்புக்கில் இவரை உங்களுக்கு தெரியலாம் என்று காண்பிக்கும் பெயர்களில், என் சிறு வயது பள்ளி தோழியின் பெயரை பார்த்தேன், அவள் முகம் நினைவு இல்லை ஆனால் பெயர் மட்டும் நினைவில் இருப்பதால் அவள்தான என்றும் சரியாக தெரியவில்லை.
சரி அப்படியே பள்ளி நினைவுகளில் போய் வருவோம்
சென்னை திருவெற்றியூர் பகுதியில் இருக்கும் மெட்ராஸ் தமிழ் மிசன் பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஐந்து வயது இருக்கும்போதே என்னை பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.
இன்னைக்கு இருக்கும் மாதிரி அப்போ எல்லாம் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர் சிரமம் ஏதும் அடைய வேண்டாம். பள்ளிக்கு கொண்டு போனார்கள், தலைமை ஆசிரியர் முன் நம்ம வலது கையை தலைக்குமேல் கொண்டு சென்று இடது காதினை தொட்டால் ஆறு வயசு ஆனா ஆள என்று முதலாம் வகுப்பில் சேர்த்து கொள்வார்கள்.
அப்படி ஒருவருஷம் முன்னாடியே என்னை கொண்டு போய் சேர்த்துட்டாங்க, ஒரு கரும்பலகை, ஒரு புத்தகம், இதுதான் அன்னைக்கு ஒன்னாம் வகுப்பிற்கு தேவை.எல்லாம் வாங்கி முதல் நாள் பள்ளிக்கு போயாச்சி, பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை. தினமும் பள்ளிக்கு போய்கிட்டு இருந்தேன்.
ஒரு நாள் தேர்வு நடந்தது, ஆசிரியர் சொல்லுவதை நம் கரும்பலகையில் எழுதணும், பின்னர் அவர் பார்த்து மதிப்பெண் போடுவார், தப்பா எழுதின இரண்டு உதைபோடுவார். ஆசிரியர்கள் எல்லாருமே தாய்குலங்கள்தான். அதனால் உதை அவ்வளவு கடினமா இருக்காது.
என்னுடைய விடையை திருத்துமுன் மணி அடிக்க, எங்கள் ஆசிரியர் கிளம்பிட்டார், பள்ளியும் முடிந்துவிட்டது. எனக்கு ஒரே அழுகை, வீட்டிற்கு போனால் அப்பா என்ன சொல்லுவர் என்று பயம்.
அதே அழுகை முகத்துடன் பள்ளிக்கு வெளியே வந்தேன், என் அண்ணனும், சின்ன அக்காவும் அதே பள்ளியில்தான் படிக்கிறாங்க அப்போ, என் அழுகை முகத்தை கண்ட என் அண்ணன் என்ன விஷயம் என கேட்க, விவரத்தினை சொன்னேன்.
அவ்வளவுதானா என கேட்டு, என் பலகையை வாங்கி அவனே மதிப்பெண் போட்டான், சந்தோசமா வாங்கி வீட்டுக்கு கிளம்பினோம், வீட்டுக்கு போகும் வழியில்தான், அப்பாவின் தையல் கடை, கடைக்கு போய் என் மதிப்பெணை காட்டினேன். அதை பார்த்தவுடன் தந்தையின் முகம் மாறியது................
எதுக்கு?
தொடரும்
சனி, 22 செப்டம்பர், 2012
யேசு கிறிஸ்து
மண்ணுலக மாந்தர் எம் துயர் தீர்க்க
விண்ணிலிருந்து வந்த தேவன் அவர்
அன்பின் சின்னமாய், கருணையின் கடலாய்
மனிதவுருவெடுத்து மண்ணில் அவதரித்தார்
பாதை மாறிய தம் பாச மந்தைக்கு,
பரிவினால் வழிகாட்டும் மேய்ப்பனாய் மாறினார்
அடைக்க்கலாமின்றி அலைந்த அனாதைகளுக்கு
அன்பு, பரிவு, பாசம் காட்டி அன்னையாகினார்
மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல
என் வாழ்வு தரும் வார்த்தையாலும்
வாழ்வுண்டு எனும் வழியை காட்டிய
வள்ளலாக வாழ்ந்து காட்டினர்
பணிவிடை பெற அல்ல,
பணிவிடை செய்யவே வந்தேன்
என எளிமையின் வழி நடந்த
ஏற்றமீகு தலைவன் அவர்
இத்தனைக்கும் மேலாக, பாவக்கடலில்
தத்தளிக்கும் எம்மை கரை சேர்க்க
ஆணிகளால் அறைப்பட்டு,
சிலுவையில் ஆவித்துறந்தான் எம் இறைவன்
நம் பாவ கறை நீக்க தன் ரத்தத்தால் பாதையமைத்த
பாமரன் நம்மை பரிவோடு அழைக்கிறார்
பணிவுடன் அவர் பாதம் தொழுவோம் வாரீர்.
விண்ணிலிருந்து வந்த தேவன் அவர்
அன்பின் சின்னமாய், கருணையின் கடலாய்
மனிதவுருவெடுத்து மண்ணில் அவதரித்தார்
பாதை மாறிய தம் பாச மந்தைக்கு,
பரிவினால் வழிகாட்டும் மேய்ப்பனாய் மாறினார்
அடைக்க்கலாமின்றி அலைந்த அனாதைகளுக்கு
அன்பு, பரிவு, பாசம் காட்டி அன்னையாகினார்
மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல
என் வாழ்வு தரும் வார்த்தையாலும்
வாழ்வுண்டு எனும் வழியை காட்டிய
வள்ளலாக வாழ்ந்து காட்டினர்
பணிவிடை பெற அல்ல,
பணிவிடை செய்யவே வந்தேன்
என எளிமையின் வழி நடந்த
ஏற்றமீகு தலைவன் அவர்
இத்தனைக்கும் மேலாக, பாவக்கடலில்
தத்தளிக்கும் எம்மை கரை சேர்க்க
ஆணிகளால் அறைப்பட்டு,
சிலுவையில் ஆவித்துறந்தான் எம் இறைவன்
நம் பாவ கறை நீக்க தன் ரத்தத்தால் பாதையமைத்த
பாமரன் நம்மை பரிவோடு அழைக்கிறார்
பணிவுடன் அவர் பாதம் தொழுவோம் வாரீர்.
வெள்ளி, 21 செப்டம்பர், 2012
திங்கள், 17 செப்டம்பர், 2012
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
கேள்வி
நீ என்னை நேசிக்கிறாய?
இந்த கேள்வி ஒவ்வொரு முறையும்
என்னை நோக்கி, உன்னால் எழுப்பபடும் போது
என் உணர்வுகளை சொல்ல வார்த்தை இன்றி
உடைந்து போகிறேன்
இதயத்தினை திறந்து
அதில் உன் இருப்பை காட்ட
நான் அனுமனும் அல்ல
மூச்சுக்கு முன்னுறு முறை
உன்னை வர்னித்து கவிதை எழுத
நான் கவிஞசனும் அல்ல
வார்த்தையால் வலி உண்டாக்கியபின்
மன்னிப்பு என்ற மருத்திடுவது
உனக்கு வாடிக்கையாகவும்
வேடிக்கையாகவும் இருக்கலாம்
வார்த்தையால் என்னால் வரையறுக்க முடியாது
உன் மீது இருக்கும் என் நேசத்தை
சுவாசிப்பதை என்று நிறுத்துவேனோ
அன்று உன்னை நேசிப்பதையும் நிறுத்துவேன்
கேள்விகள் நிறைந்ததுதான் காதல்
ஆனால் காதலே கேள்வியானால்
கண்ணீரும், காயமே பதிலாகும்.
இந்த கேள்வி ஒவ்வொரு முறையும்
என்னை நோக்கி, உன்னால் எழுப்பபடும் போது
என் உணர்வுகளை சொல்ல வார்த்தை இன்றி
உடைந்து போகிறேன்
இதயத்தினை திறந்து
அதில் உன் இருப்பை காட்ட
நான் அனுமனும் அல்ல
மூச்சுக்கு முன்னுறு முறை
உன்னை வர்னித்து கவிதை எழுத
நான் கவிஞசனும் அல்ல
வார்த்தையால் வலி உண்டாக்கியபின்
மன்னிப்பு என்ற மருத்திடுவது
உனக்கு வாடிக்கையாகவும்
வேடிக்கையாகவும் இருக்கலாம்
வார்த்தையால் என்னால் வரையறுக்க முடியாது
உன் மீது இருக்கும் என் நேசத்தை
சுவாசிப்பதை என்று நிறுத்துவேனோ
அன்று உன்னை நேசிப்பதையும் நிறுத்துவேன்
கேள்விகள் நிறைந்ததுதான் காதல்
ஆனால் காதலே கேள்வியானால்
கண்ணீரும், காயமே பதிலாகும்.
ஞாயிறு, 2 செப்டம்பர், 2012
"அன்பே சிவம்"
அடியும், முடியும் அளக்கமுடியா திருவுருவே
ஓம் என்ற பிரனவமந்திரத்தின் கருவுருவே
அழித்தலின் கடமையில் உலகின்,
தீமைகள் கருவறுக்கும் இறைவனே
மூலவன், எம் மூத்தவனின் உருப்பொருளே
லிங்கமாய் உருவெடுத்து,
கங்கைக்கு இடம் கொடுத்து
பித்தா பிறைசூடி பெருமானே என
உன் பக்தன் பாட்டு இசைக்க
பாதை காட்டிய பரம்பொருளே
இத்தனை சொல்லி, எம் பெருமானே, ஈசனே,
உன்னை நான் அறிந்ததைவிட
"அன்பே சிவம்" என்ற அரும்சொல்லல்
உன்னை புரிந்தேன், உணர்ந்தேன்.
”ஓம் நமச்சிவாய போற்றி, நாதன் தாள் போற்றி”
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








