செவ்வாய், 6 நவம்பர், 2012

சென்று வா எம் தகப்பனே சென்று வா




கைபிடித்து எம்மை வழி நடத்தி
உலக வாழ்க்கையை
உம் வாழ்க்கையால்
எமக்கு கற்று தந்து
வயதின் மூப்பால்
ஓய்வெடுக்க நீ
இன்று உறங்கி போனாய்

எளிய வாழ்கையிலும் மனநிறைவாய்
எந்த நேரத்திலும் நேர் வழியில்
வாழ வேண்டும் என்று சொல்லி
அந்த சொல்லாக வாழ்ந்து விட்டு
சொர்கம் சேர நீ
இன்று உறங்கி போனாய்

கண்ணே மணியே என்று எங்களை
கொஞ்சவில்லை என்றாலும்
கண்ணின் மணி போல் எங்களை
காத்து வளர்த்து, ஆளாக்கி
உன்னை படைத்த 
கடவுளை காணும் ஆவலுடன்
கண் மூடி நீ உறங்கி போனாய்

இறைவனின் இல்லத்தில்
நீ இளைப்பாறி, எங்களை
காத்து இனியும் வழி நடத்துவீர்
என்ற நம்பிக்கையுடன் சொல்கிறோம்
சென்று வா எம் தகப்பனே
சென்று வா எம் தகப்பனே....................