செவ்வாய், 4 செப்டம்பர், 2012

கேள்வி

நீ என்னை நேசிக்கிறாய?
இந்த கேள்வி
ஒவ்வொரு முறையும்
என்னை நோக்கி, உன்னால் எழுப்பபடும் போது
என் உணர்வுகளை சொல்ல வார்த்தை இன்றி
உடைந்து போகிறேன்

இதயத்தினை திறந்து
அதில் உன் இருப்பை காட்ட
நான் அனுமனும் அல்ல

மூச்சுக்கு முன்னுறு முறை
உன்னை வர்னித்து கவிதை எழுத
நான் கவிஞசனும் அல்ல

வார்த்தையால் வலி உண்டாக்கியபின்
மன்னிப்பு என்ற மருத்திடுவது
உனக்கு வாடிக்கையாகவும்
வேடிக்கையாகவும் இருக்கலாம்

வார்த்தையால் என்னால் வரையறுக்க முடியாது
உன் மீது இருக்கும் என் நேசத்தை
சுவாசிப்பதை என்று நிறுத்துவேனோ
அன்று உன்னை நேசிப்பதையும் நிறுத்துவேன்

கேள்விகள் நிறைந்ததுதான் காதல்
ஆனால் காதலே கேள்வியானால்
கண்ணீரும், காயமே பதிலாகும்.

கருத்துகள் இல்லை: