சனி, 22 செப்டம்பர், 2012

யேசு கிறிஸ்து

மண்ணுலக மாந்தர் எம் துயர் தீர்க்க 
விண்ணிலிருந்து வந்த தேவன் அவர்
அன்பின் சின்னமாய், கருணையின் கடலாய்
மனிதவுருவெடுத்து மண்ணில் அவதரித்தார்

பாதை மாறிய தம் பாச மந்தைக்கு,
 
பரிவினால் வழிகாட்டும் மேய்ப்பனாய் மாறினார்
அடைக்க்கலாமின்றி அலைந்த அனாதைகளுக்கு  
அன்பு, பரிவு, பாசம் காட்டி அன்னையாகினார்

மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல
என் வாழ்வு தரும் வார்த்தையாலும்
வாழ்வுண்டு எனும் வழியை காட்டிய
வள்ளலாக வாழ்ந்து காட்டினர்

பணிவிடை பெற அல்ல,
பணிவிடை செய்யவே வந்தேன்
என எளிமையின்
வழி நடந்த
ஏற்றமீகு தலைவன் அவர்

இத்தனைக்கும் மேலாக, பாவக்கடலில்
தத்தளிக்கும் எம்மை கரை சேர்க்க
ஆணிகளால் அறைப்பட்டு,
 
சிலுவையில் ஆவித்துறந்தான் எம் இறைவன்

நம் பாவ கறை நீக்க தன் ரத்தத்தால்
பாதையமைத்த  
பாமரன் நம்மை பரிவோடு அழைக்கிறார்
பணிவுடன் அவர் பாதம் தொழுவோம் வாரீர்.

கருத்துகள் இல்லை: