மீண்டும் ஒரு மனித தவறால் மரித்து போன
மலர் மஹிக்கு, என் கண்ணீர் அஞ்சலி
*********************************************
மலரே மஹி
சில மனித மிருங்களின்
மதி கெட்ட மறதியால்
இந்த பூமியில் உதித்து
மலரும் முன் உதிர்ந்து போனாய்
படுங்குழியில் நீ பட்ட வேதனைகள்
ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாத வடுவாய்
உன்னை பெற்றவர்களுக்கு மட்டும்மல்ல
எங்களுக்கும் நிலைத்திருக்கும்
உடல் துறந்து உலகம் விட்டு சென்ற மெல்லிய பூவே,
மண்ணில் நீ புதைக்கப்பட்டாலும்,எங்கள் நெஞ்சில்,
உன் நிணைவுகளை விதைத்து விட்டு சென்றுவிட்டாய்
தீரா ரணத்துடன் உன் ஆன்மா சாந்தியடையவும்
உம் பெற்றோர், உற்றோர் ஆறுதல் அடையும்
விழி நிறைந்த கண்ணீருடன் வேண்டுகிறோம்
இறைவனின் இல்லத்தில்
இளைப்பாறிக் கொண்டு இருப்பாய்
என இதயம் நிறை நம்பிக்கையுடன்
விடைக்கொடுக்கிறோம்
சென்று வா சிறுமலரே
1 கருத்து:
அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்தாலே கண்கள் தானாகக் கலங்குகிறது.
கருத்துரையிடுக