சனி, 23 ஜூன், 2012

கனவு......................

நெடும் கனவில் உன் விரல் பிடித்து
கடற்கரை மணலில் கால் பதித்து நிற்கிறேன்

வீசும் காற்றுக்கு வீணை மீட்டி
என் மூச்சு காற்றும்,
உன் மூச்சு காற்றும் பேசிக்கொள்ள ,

இணைய முடியா இருப்பில்
நம் இரு உதடுகளும் துடிக்க
இவற்றின் நிலையால் என் உடலில்
ஏற்படும் சில ரசாயண மாற்றத்தை
நான் விழி மூடி ரசிக்கும்,
ஒரு இனிய தருணம்
இடைவெளியின்றி நடந்தது

பின், மெல்ல விழி திறந்து பார்க்கிறேன்
விழி மூடி இருந்த என்னை
விழி அசையாமல் ரசிக்கும்
உன்னை கண்டேன்

விழி மூடி ரசித்த என் அனுபவம் பெரியதா,
இல்லை, விழி அசையா என்னை ரசித்த,
உன் ரசனையின் அனுபவம் பெரியாதா,
என்ற கேள்வியுடன்
தொடர்கிறது மீண்டும் கனவு


கருத்துகள் இல்லை: