என் வார்த்தை வாளின்
தீண்டுதலால் நீ வாடி துடித்தபோது
நீ அடைந்த வலியை விட
நான் துடித்த வலி அதிகம்
இதயத்தில் இருப்பவர்களின்
வாயில் இருந்து இடறி விழும்
ஒரு வார்த்தையும்,
சீறும் பாம்பை விட
சீற்றம் கொண்டது என
நீ இதயம் சிதைந்து தீண்டுதலால் நீ வாடி துடித்தபோது
நீ அடைந்த வலியை விட
நான் துடித்த வலி அதிகம்
இதயத்தில் இருப்பவர்களின்
வாயில் இருந்து இடறி விழும்
ஒரு வார்த்தையும்,
சீறும் பாம்பை விட
சீற்றம் கொண்டது என
அழுதபோது புரிந்தது
இதயத்தில் இருக்கும் என்னுயிரே
புரிதலின் சிறு பிழையால்,
உன் இதயத்தில் நுழைந்த
என் வார்த்தையால்
நீ துடித்த துடிப்பு கண்டு
விழி கலங்கி, உயிர் துடிக்க நிற்கிறேன்
மன்னிப்பு என்ற வார்தையால்
உனக்கு மருந்திட முடியாது
என்று தெரிந்தாலும்
மனம் கலங்கி கேட்கிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக